"பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த விரும்பாதவர் ஜெயலலிதா" -முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பை கடைசி வரை விரும்பாதவர் ஜெயலலிதா எனவும், தற்போதைய பினாமி அரசு வரியை உயர்த்திருப்பது தவறான கொள்கை முடிவு என முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நாளை காலை 11 மணக்கு ஓ.பி.எஸ் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும், தங்கள் அணிக்கு வெற்றி வாய்பிருப்பதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில், சட்டமன்றத்தில் மறைமுக வாக்கெடுப்பிற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி மக்களின் மனநிலையை உணர்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும் என்றார். 

பொதுச்செயலாளர் தேர்தல் நீதிமன்ற உத்திரவு படியோ தேர்தல் ஆணைய உத்திரவுபடியோ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், வெகுவிரைவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகள் கேட்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களின் ஆவல் எனவும் தெரிவித்தார். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக தங்களுக்கு ஜெயலலிதா ஆன்மாவின் ஆசியுடன் கிடைக்கும் என நம்புவதாக கூறிய அவர், கல்வி துறையின் செயல்பாடுகள் ஜெயலலிதா விரும்பிய படி இருக்க வேண்டும் எனவும் பல சவால்கள் கல்வித்துறை முன்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...